பேஸ்புக் நிறுவனத்துக்கு எதிராக ஆஸ்திரேலியா வழக்கு - தனிப்பட்ட தகவல்களை திரட்டியதாக புகார்
பேஸ்புக் நிறுவனத்துக்கு எதிராக ஆஸ்திரேலிய அரசு வழக்கு தொடுத்து உள்ளது.;
பேஸ்புக் நிறுவனத்துக்கு எதிராக ஆஸ்திரேலிய அரசு வழக்கு தொடுத்து உள்ளது. பாதுகாப்பு மென்பொருளில் இருந்து, பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பேஸ்புக் நிறுவனம் திரட்டியதாகவும், அதற்காக அந்த நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டும் என்றும், ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வு ஆணையம் வழக்கு தொடர்ந்து உள்ளது. முன்னதாக, சிறு நிறுவனங்களின் வளர்ச்சியை நசுக்குவதாக பேஸ்புக் நிறுவனத்தின் மீது அமெரிக்க வர்த்தக ஆணையம் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.