"தீவிரவாதத்தை அழிக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்" : இந்தியா- அமெரிக்கா வலியுறுத்தல்

தீவிரவாதத்தை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.

Update: 2018-09-07 06:08 GMT
இந்திய- அமெரிக்க பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் இடையே டெல்லியில் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், சுஷ்மா சுவராஜ் மற்றும் அமெரிக்க அமைச்சர்கள் மைக் பாம்பியோ, ஜின் மேட்டீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதன் பின்னர் இரு நாடுகள் இடையே தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்,  முக்கிய பிரச்சினைகளில் இரு நாடுகளின் அமைச்சர்களும் உடனடி தொடர்பு கொள்ளும் வகையில், புதிதாக ஹாட் லைன் தொலைபேசி வசதி ஏற்படுத்தப்படும் என்றார்.
Tags:    

மேலும் செய்திகள்