தமிழகத்தில் மேலும் 1,585 பேருக்கு கொரோனா - ஒரே நாளில் 27 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.;
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
தமிழகத்தில் புதிதாக ஆயிரத்து 585 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 4 ஆயிரத்து 74 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு ஒரே நாளில் 27 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 34 ஆயிரத்து 761 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் ஆயிரத்து 842 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், 18 ஆயிரத்து 603 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 190 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையை அடுத்து சென்னையில் 165 பேருக்கும், ஈரோட்டில் 138 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தஞ்சாவூரில் 98 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், செங்கல்பட்டில் 92 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.