தமிழகத்தில் இன்று 2,913 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மூவாயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.;

Update: 2021-07-10 15:51 GMT
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மூவாயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 913 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 16 ஆயிரத்து 11 ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனாவுக்கு ஒரே நாளில் 49 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 33 ஆயிரத்து 371 ஆக அதிகரித்து உள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 3 ஆயிரத்து 321 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், 32 ஆயிரத்து 767 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதனிடையே தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 349 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 
கோவைக்கு அடுத்து ஈரோட்டில் 230 பேரும், சேலத்தில் 191 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

சென்னை மற்றும் தஞ்சாவூரில் தலா 174 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்