ஆன்லைனில் பாலியல் தொழில் - வாடிக்கையாளர் போல் பேசி மடக்கி பிடித்த போலீஸ்
சேலம் மாவட்டம் மேட்டூரில், தனி இணையதளம் தொடங்கி பாலியல் தொழில் நடத்திவந்த நபரை போலீசார் கைது செய்தனர்.;
சேலம் மாவட்டம் மேட்டூரில், தனி இணையதளம் தொடங்கி பாலியல் தொழில் நடத்திவந்த நபரை போலீசார் கைது செய்தனர். போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, இணையதளத்தில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு வாடிக்கையாளர் போல் பேசியுள்ளனர். இதையடுத்து, மேட்டூர் பேருந்து நிலையம் வந்த கார்த்திகேயன் என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர். இவர் தொழிலதிபர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து, பெண்களின் புகைப்படங்களை காட்டி மோசடி செய்தது தெரியவந்துள்ளது.