தீக்குளித்து உயிரிழந்த இளைஞரின் மனைவிக்கு மாதாந்திர உதவித்தொகை ஆணையை வழங்கினார் அமைச்சர் கே.சி.வீரமணி

கடந்த 12ஆம் தேதி முழு ஊரடங்கு உத்தரவின் போது, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் போலீசார் தனது வாகனத்தை பறிமுதல் செய்ததால் விரக்தியில் முகிலன் என்ற இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2020-07-26 05:26 GMT
கடந்த 12ஆம் தேதி முழு  ஊரடங்கு உத்தரவின் போது,  திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் போலீசார் தனது வாகனத்தை பறிமுதல் செய்ததால் விரக்தியில் முகிலன் என்ற இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், ஆம்பூரில் போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்ததால், முகிலன் என்ற இளைஞர் தீக்குளித்து உயிரிழந்த நிலையில், அவரது மனைவி லீலாவிற்கு அமைச்சர் கே.சி. வீரமணி  ஆறுதல் கூறினார். அப்போது, விதவைகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை  அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவனருள் ஆகியோர் வழங்கினர்.
Tags:    

மேலும் செய்திகள்