வெளிநாடுகளில் இருந்து சென்னை வந்த 20 பேருக்கு கொரோனா
குவைத், சிங்கப்பூர், பக்ரைன் ஆகிய நாடுகளில் இருந்து சிறப்பு விமானத்தில் சென்னை வந்த 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.;
குவைத், சிங்கப்பூர், பக்ரைன் ஆகிய நாடுகளில் இருந்து சிறப்பு விமானத்தில் சென்னை வந்த 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 308 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 135 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இந்த நிலையில் முகாமில் தங்கியிருந்த வர்களுக்கு மீண்டும் செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது