வீடுகளில் தர்ப்பணம் கொடுக்கும் மக்கள் - காவேரி கரையில் தர்ப்பணம் கொடுக்க அனுமதிக்க கோரிக்கை

வீடுகளில் தர்ப்பணம் கொடுக்கும் மக்கள் காவேரி கரையில் தர்ப்பணம் கொடுக்க அனுமதிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2020-06-20 09:44 GMT
அமாவாசை தினத்தையொட்டி,பவானி கூடுதுறையில் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்து வருவது வழக்கம். இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு காரணமாக தற்போது புரோகிதர்கள் பக்தர்களை தங்களது வீடுகளுக்கு அழைத்துச் சென்று திதி மற்றும் தர்ப்பணம் செய்து வருகின்றனர். இதனிடையே,காவிரிக்கரை பகுதியில் தர்ப்பணம் செய்ய அரசு அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் மற்றும்  புரோகிதர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்