"ஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோல் விலை" - தமிழிசை

தமிழகத்தில் வாக்கு சாவடி அளவிற்கு பலப்படுத்துவதற்கான முயற்சியில் பா.ஜ.க ஈடுபட்டு வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-23 04:02 GMT
தமிழகத்தில் வாக்கு சாவடி அளவிற்கு பலப்படுத்துவதற்கான முயற்சியில் பா.ஜ.க ஈடுபட்டு வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் நடைபெற்ற பாஜகவின் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பெட்ரோல்,டீசல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வருவது குறித்துமத்திய அரசு ஆலோசிப்பதாகவும் விலையை குறைப்பதற்கான அத்தனை முயற்சிகளையும் மத்திய அரசு எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்