ஹோட்டல்கள் எத்தனை மணி நேரம் திறந்திருக்க வேண்டும்..?

சென்னையில் எத்தனை மணி நேரம் ஹோட்டல்கள் திறந்திருக்க வேண்டும் என்பது குறித்த நிபந்தனைகளை உருவாக்குமாறு மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Update: 2018-09-12 18:14 GMT
சென்னையில் இரவு 10 மணிக்கு மேல் உணவகங்களை மூடுமாறு போலீசார், நிர்பந்தம் செய்வதாக, கணேஷ் பிரபு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மணிகுமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையரை எதிர் மனுதாராக சேர்க்க உத்தரவிட்டதோடு, சென்னையில் எந்தெந்த பகுதியில் எத்தனை மணி நேரம் கடைகள் திறந்திருக்க வேண்டும் என்பது குறித்த நிபந்தனைகளை உருவாக்குமாறு அறிவுறுத்தி, விசாரணையை அக்டோபர் 3 ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்