குட்கா முறைகேடு - மாதவராவிடம் தீவிர விசாரணை

குட்கா வழக்கில் கைதான மாதவராவை குட்கா குடோனுக்கு சிபிஐ அதிகாரிகள் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

Update: 2018-09-12 13:22 GMT
குட்கா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாதவராவை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து, கடந்த திங்கள் கிழமை முதல் அவரிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 நாள் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்களை அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், இன்று காலை 11 மணியளவில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் இருந்து மாதவ ராவை, 20க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். சென்னையை அடுத்த மாதவரம் மற்றும் செங்குன்றத்தில் உள்ள குட்கா ஆலை மற்றும் குடோனுக்கு அவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, மாதவராவின் இரண்டு வங்கி கணக்குகளை, சிபிஐ முடக்கி உள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்