ஆதினத்துக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் தவிர வேறு பணி மேற்கொள்ளக் கூடாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் தவிர வேறெந்த பணிகளும் மேற்கொள்ளக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-09-12 13:01 GMT
குற்றாலம் பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள திருவாவடுதுறை ஆதினத்துக்கு சொந்தமான 14 ஏக்கர் நிலத்தை வணிக நோக்கில்  பயன்படுத்த தடை விதிக்கக் கோரி நெல்லை மாவட்டம் மேலகரத்தை சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேசன், சதீஷ்குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான விளைநிலத்தில் விவசாய பணிகள் தவிர வேறெந்த பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்