தூத்துக்குடி : பெண் அரசு ஊழியர் ஆசை திரைப்பட பாணியில் முகத்தை மூடி மர்மச்சாவு

கொலையா? தற்கொலையா? என போலீஸ் விசாரணை

Update: 2018-09-12 12:26 GMT
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் ஸ்டெனோவாக வேலை பார்த்து வந்தவர் தமிழ்ச்செல்வி. கணவன் இறந்த நிலையில் கோரம்பள்ளம் அருகே உள்ள அரசு ஊழியர்களுக்கான குடியிருப்பில் அவர் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 7 ஆம் தேதி அலுவலகம் சென்று வீட்டிற்கு திரும்பிய தமிழ்ச்செல்வி வெளியே வரவில்லை. 

இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீஸார்க்கு தகவல் கொடுத்தனர். தகவறிந்து வந்த காவல் துறையினர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது முகத்தில் பாலீதீன் கவர் கட்டப்பட்ட நிலையில், தமிழ்ச்செல்வி உயிரிழந்து கிடந்தார். இந்த சம்பவம் கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்