சேலம் : பருவ நிலை மாற்றத்தால் கருகும் பூக்கள்..!

பருவ நிலை மாற்றத்தால் பூக்கள் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2018-09-12 12:19 GMT
சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் குண்டு மல்லி, சம்மங்கி, மரிக்கொழுந்து, சாமந்தி உள்ளிட்ட பல்வகை மலர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. சாமந்தி பயிரிடும் பணிகள் நடைபெற்றுள்ள நிலையில் வெயில் மற்றும் காற்று அதிகரிப்பால் அதன் மொட்டுக்கள் கருகியும் செடிகள் அழுகியும் வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இது குறித்து தோட்டக்கலைக் கலைத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்