அரசு பொறியியல் கல்லூரி கணினி உதிரிபாகங்கள் திருட்டு : ஆய்வக உதவியாளர் கைது

நாகர்கோவில் அருகே உள்ள கோணம் பகுதியில் அரசு பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

Update: 2018-09-11 07:58 GMT
நாகர்கோவில் அருகே உள்ள கோணம் பகுதியில் அரசு பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கணினி ஆய்வக உதவியாளராக குழித்துறையை சேர்ந்த கிஷோர் பாபு பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களாக கணினி ஆய்வகத்தில் உள்ள 55 கணினிகளிலும் அதன் உதிரிபாகங்கள் காணாமல் போனது. கல்லூரி முதல்வர் மேற்கொண்ட விசாரணையில் ஆய்வக உதவியார் கிஷோர் பாபு கணினி உதிரிபாகங்களை கடத்தி கேரளாவில் விற்று வந்தது தெரியவந்தது. ஆசாரிபள்ளம் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரையடுத்து, கிஷோர் பாபுவை போலீஸார் கைது செய்தனர்.  
Tags:    

மேலும் செய்திகள்