மர்மநபர்களால் கடத்தப்பட்ட மாணவன் : சாதுர்யமாக தப்பி வந்ததால் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் மர்மநபர்களால் கடத்தப்பட்ட மாணவன் சாதுர்யமாக தப்பி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-09-10 12:53 GMT
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியில் மர்மநபர்களால் கடத்தப்பட்ட மாணவன் சாதுர்யமாக தப்பி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பத்தாம் வகுப்பு பயின்று வரும் முருகன் என்ற மாணவரை, கடந்த ஞாயிறன்று, மர்மநபர்கள் 2 சக்கர வாகனத்தில் கண்ணையும், வாயையும் துணியால் கட்டி கடத்தி சென்றனர். சுமார் 3 கிலோ மீட்டர் வரை சென்றதும் முருகன் அவர்களிடம் இருந்த சாதுர்யமாக தப்பியுள்ளான். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஆறுமுகநேரி போலீசார், சிசிடிவி காட்சிகளை கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்