மர்மநபர்களால் கடத்தப்பட்ட மாணவன் : சாதுர்யமாக தப்பி வந்ததால் பரபரப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் மர்மநபர்களால் கடத்தப்பட்ட மாணவன் சாதுர்யமாக தப்பி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியில் மர்மநபர்களால் கடத்தப்பட்ட மாணவன் சாதுர்யமாக தப்பி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பத்தாம் வகுப்பு பயின்று வரும் முருகன் என்ற மாணவரை, கடந்த ஞாயிறன்று, மர்மநபர்கள் 2 சக்கர வாகனத்தில் கண்ணையும், வாயையும் துணியால் கட்டி கடத்தி சென்றனர். சுமார் 3 கிலோ மீட்டர் வரை சென்றதும் முருகன் அவர்களிடம் இருந்த சாதுர்யமாக தப்பியுள்ளான். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஆறுமுகநேரி போலீசார், சிசிடிவி காட்சிகளை கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.