பெரம்பலூரில் ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு பேரணி...

பெரம்பலூரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2018-09-10 10:09 GMT
பெரம்பலூரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சாந்தா கொடியசைத்து தொடங்கி வைத்த இந்த பேரணி, பாலக்கரையில் தொடங்கி  முக்கிய வீதிகள் வழியாக பழைய பேருந்து நிலையத்தை அடைந்தது. இதில், ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி, 300-க்கும் மேற்பட்ட சத்துணவு அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்