நாளை மறுநாள் இமானுவேல் சேகரன் நினைவு தினம்...

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளதை முன்னிட்டு 144 தடை உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வந்தது.

Update: 2018-09-09 11:34 GMT
* பரமக்குடியில் நாளை மறுநாள் இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படவுள்ளது. இதையடுத்து, நிகழ்ச்சியில் பங்கேற்க பரமக்குடி வருகிறவர்கள் டூரிஸ்ட் கார், வேன் போன்ற வாடகை வாகனங்களில் வர அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டு வருகிறது. அழகப்பா பல்கலைக்கழகம் அருகில் உள்ள திடலில் நினைவஞ்சலிக்கு வரும் வாகனங்கள் நிறுத்தி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

* பரமக்குடி நகரம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். 8 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

மேலும் செய்திகள்