நத்தம் பகுதியில் தொடர் தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் தொடர்ந்து 3 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-09-09 06:10 GMT
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் தொடர்ந்து 3 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நத்தம் மஸ்தான் பள்ளிவாசல் பகுதியில் உள்ள வாழைப்பழ குடோனில் நேற்று இரவு 10 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. இதில் 3 லட்சம் மதிப்பிலான வாழைப்பழங்கள் கருகின. அதேபோல் இரவு 12 மணிக்கு முன்றுலந்தர் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 கடைகள் சேதம் அடைந்தன. 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகின. ஒரு மணி அளவில் மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட தீயை தீயணைப்புத்துறையினர் போரடி அணைத்தனர். ஒரே பகுதியில் அடுத்தடுத்த 3 இடங்களில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்