செய்யாத்துரை வீட்டில் சோதனை நிறைவு

சுமார் 9 மணி நேரம் சோதனை நடத்தப்பட்டதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Update: 2018-09-08 19:01 GMT
நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாத்துரையின் அருப்புக்கோட்டை வீட்டில், கடந்த 2 நாட்களாக நடந்து வந்த, வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை நிறைவடைந்துள்ளது. செய்யாத்துரையின் வீட்டில் இருந்து சூட்கேஸ், மடிக்கணினி, 5 பைகள் நிறைய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்து சென்றனர். இணை ஆணையர் ஜெயராகவன் தலைமையில், செய்யாத்துரை வீட்டில், 2 வது நாளில் மட்டும் சுமார் 9 மணி நேரம் சோதனை நடத்தப்பட்டதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Tags:    

மேலும் செய்திகள்