தாராபுரம் கூட்டுறவு வங்கி தேர்தல் : 2 முறை வாக்களித்த வீடியோ வெளியானதால் பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற கூட்டுறவு வங்கி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2018-09-07 05:33 GMT
கடந்த ஒன்றாம் தேதி, தாராபுரம் கூட்டுறவு வங்கி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக மற்றும் திமுகவை சேர்ந்த 11 பேர், வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தலின் போது, முறைகேடுகள் நிகழ்ந்ததாகவும், அதிமுக வேட்பாளர் தண்டபாணியின் மகன் விவேக், திமுக பிரமுகர் யூசுப் அலி ஆகிய இருவரும் 2 முறை வாக்களிக்கும் வீடியோ காட்சிகளும் வெளியாகின. எனவே, கூட்டுறவு தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்