குட்கா ஊழல் : மாதவராவ் உள்ளிட்ட 5 பேர் கைது

தமிழகத்தை உலுக்கிய குட்கா ஊழல் வழக்கில் குடோன் உரிமையாளர் மாதவராவ் அவரது கூட்டாளிகள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-09-07 01:19 GMT
சிபிஐ அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையை தொடர்ந்து சிக்கிய மாதவராவ், கூட்டாளி உமா சங்கர் குப்தா, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில் முருகன், கலால் வரித்துறை அதிகாரி என்.கே. பாண்டியன் மற்றும் சீனிவாச ராவ் ஆகிய 5 பேரும் மாலையில், சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்கள் 5 பேரையும் வருகிற 20 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி திருநீலபிரசாத் உத்தரவிட்டார். பின்னர், மாதவராவ் உள்ளிட்ட 5 பேரும், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்