பேரறிவாளன், முருகன் உள்ளிட்டோரை விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநரே முடிவு செய்யலாம் - உச்ச நீதிமன்றம்

பேரறிவாளன், முருகன் உள்ளிட்டோர் விடுதலை தொடர்பாக முடிவு எடுக்க தமிழக ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Update: 2018-09-06 06:54 GMT
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன், நளினி, முருகன் உட்பட 7 பேர் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர்.  கருணை அடிப்படையில் இவர்களை விடுவிக்கக் கோரி தமிழக அரசு அனுப்பிய கடிதங்கள் நிராகரிக்கப்பட்டன. இதனிடையே, இவர்களை விடுவிக்க மறுப்பு தெரிவித்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக முடிவு எடுக்க தமிழக ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என தெரிவித்துள்ளது. 2015 டிசம்பர் 30ஆம் தேதி ஆளுநரிடம் கொடுக்கப்பட்ட மனு மீது அவரே முடிவு எடுக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.













Tags:    

மேலும் செய்திகள்