புதுக்கோட்டை : ஆசிரியர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற மாணவர்கள்...

புதுக்கோட்டையில் உள்ள சந்தபேட்டை அரசு நகராட்சி நடுநிலைப் பள்ளியில், மலர் தூவியும் பூங்கொத்து கொடுத்தும் ஆசிரியர்களை மாணவர்கள் வரவேற்றனர்.

Update: 2018-09-05 10:42 GMT
புதுக்கோட்டையில் உள்ள பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர் தின விழா சிறப்பாக கொண்டாட‌ப்பட்டது.  புதுக்கோட்டையில் உள்ள சந்தபேட்டை அரசு நகராட்சி நடுநிலைப் பள்ளியில், மலர் தூவியும் பூங்கொத்து கொடுத்தும் ஆசிரியர்களை மாணவர்கள் வரவேற்றனர். தொடர்ந்து, கேக் வெட்டியும், ஆசிரியர்களிடம் ஆசீர்வாதம் வாங்கியும், மரியாதை செலுத்தி ஆசிரியர் தின விழாவை கொண்டாடினர். 

மலர் தூவி ஆசிரியர்களுக்கு வரவேற்பு



ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு திருவிடைமருதூர் அருகே திருநாகேஸ்வரம் மேகலா நகரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர்களை மாணவர்கள் மலர் தூவி  வரவேற்றனர். ஆசிரியர்களின் பாதங்களில் மலர் தூவி மரியாதை செலுத்திய மாணவர்கள், ரோஜா மலர்கள், இனிப்புகள் வழங்கி மகிழ்வித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்