பள்ளிக் கல்வித்துறை சார்பில் முப்பெரும் விழா : முதல்முறையாக மாற்றுத் திறனாளிகளுக்கு விருது

தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் டாக்டர் ராதா கிருஷ்ணன் விருது காமராஜர் விருது மற்றும் தூய்மைப் பள்ளி விருது வழங்கும் மும்பெரும் விழா கலைவாணர் அரங்கில் இன்று மாலை நடைபெறுகிறது.

Update: 2018-09-05 08:00 GMT
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று, 373 பேருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, 920 பேருக்கு காமராஜர் விருது, 40 பள்ளிகளுக்கு தூய்மை பள்ளி விருதுகளை வழங்கி பேசுகிறார். 

இதில், முதல் முறையாக மாற்றுத்திறனாளிகள் 2 பேருக்கு விருது வழங்கப்பட உள்ளது. துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், பாடநூல் கழக தலைவர் பா.வளர்மதி மற்றும் அதிகாரிகள் விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்