குட்கா முறைகேடு : அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி வீடுகளில் சி.பி.ஐ. சோதனை...

தமிழகம் முழுவதும் 40 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2018-09-05 05:11 GMT
குட்கா முறைகேடு தொடர்பான வழக்கை சி.பி.ஐ விசாரித்து வருகிறது. குட்கா ஆலை உரிமையாளர் மாதவராவிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் 40 இடங்களில் இன்று திடீரென அதிரடி சோதனையில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை முகப்பேரில் உள்ள டிஜிபி ராஜேந்திரனின் வீடு மற்றும் அவரது அலுவலகம், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் மற்றும் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்டோர் வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. டெல்லியில் இருந்து வந்த சி.பி.ஐ. மூத்த அதிகாரிகள் குழு, இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளது. இதுபோல, விழுப்புரம், தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 40 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெறுகிறது. 


ஆவணங்களை கைப்பற்றுவதற்கான சோதனை - முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் 



Tags:    

மேலும் செய்திகள்