திருப்பூர் மாவட்டத்தில் இரவு பகலாக மது விற்பனை நடைபெறுவதாக புகார்
திருப்பூர் மாவட்டத்தில் இரவு, பகலாக தொடர்ந்து மது விற்பனை நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் இரவு, பகலாக தொடர்ந்து மது விற்பனை நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மது பிரியர்கள் குடி போதையில் ஆங்காங்கே விழுந்து கிடப்பதும் மக்களிடம் தகாராறில் ஈடுபடுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் அச்சத்துடன் வெளியே வர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.