தகாத உறவால் தனது குழந்தைகளை கொலைசெய்த தாய் அபிராமியின் பகீர் வாக்குமூலம்..!

கள்ளகாதலுக்காக பெற்ற குழந்தைகளையே கொலைசெய்த தாய் அபிராமி, போலீசில் அளித்துள்ள வாக்கு மூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-09-03 04:30 GMT
கணவர் விஜயோடு 8 ஆண்டுகள் குடும்பம் நடத்தியபோதிலும், சுந்தரத்துடனான 2 மாத கள்ளக்காதலை தன்னால் விட முடியவில்லை என்பதால், இதற்கு என்ன வழி? என்று யோசித்ததாகவும்...

அப்போது, கணவர், குழந்தைகளை கொன்றுவிட்டால் நாம் எந்த பிரச்சினையுமின்றி சந்தோ‌ஷமாக இருக்கலாம் என்று சுந்தரம் கூறியதாகவும், அபிராமி கூறியுள்ளார். 

கடந்த மாதம் 30 ஆம் தேதியில் இருந்தே கணவர், குழந்தைகளை கொலை செய்ய திட்டமிட்டு அன்று இரவே 3 பேருக்கும் வி‌ஷ மாத்திரைகள் கலந்த பாலை கொடுத்ததாகவும், அதனால் மறுநாள் காலையில் யாரும் எழுந்திருக்க மாட்டார்கள் என்று நினைத்ததாகவும் கூறியுள்ள அபிராமி, 31 ஆம் தேதி காலையில் கணவர் விஜயும், மகன் அஜயும் எழுந்து விட்டனர். 

ஆனால் மகள் கார்னிகா இரவே உயிரிழந்திருப்பாள் என்றும் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். வழக்கமாக தனது மகளுக்கு முத்தம் கொடுத்துவிட்டு செல்லும் கணவர் விஜய், அன்று கார்னிகா எழுந்திருக்காததால், அசந்து தூங்குகிறாள் என்று தான் கூற, அதை நம்பி விஜயும் வேலைக்கு சென்று விட்டதாக அபிராமி கூறியுள்ளார். 

அதன் பின்னர் மறுநாள் மீண்டும் மகன் அஜய்க்கு வி‌ஷம் கலந்த பாலை கொடுத்து, மயக்கமடைந்த பின்னர் கழுத்தை நெரித்து கொன்றதாகவும் அபிராமி போலீசில் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கோயம்பேடு பேருந்து நிலைய சிசிடிவி கேமராவில் சிக்கினார் : பரபரப்பு தகவல்கள் அம்பலம்
   
   கள்ளக் காதலன் சுந்தரத்தின் ஆலோசனையின் பேரில், தனது குழந்தைகளை கொன்று விட்டு, அபிராமி   திருவனந்தபுரத்துக்கு தப்பிச்சென்றார். 

   இதையடுத்து,  தனிப்படை போலீஸார் முதலில், தாம்பரம், பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அங்கு காட்சிகள் எதுவும் பதிவாகாததால், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்தபோது, இரு சக்கர வாகனம் நிறுத்துமிடத்தில்,  துப்பட்டாவால் முகத்தை மறைத்திருந்த அபிராமி, டோக்கன் பெறுவதற்காக, துப்பட்டாவை கழற்றியபோது, அவரது உருவம் கண்காணிப்பு கேமராவில் தெளிவாக தெரிந்தது.  

   மேலும், போலீஸார் தன்னை பிடித்து விடக்கூடாது என்பதற்காக, சிம் கார்டை உடைத்து விட்டு அபிராமி சென்றுள்ளார். திருவனந்தபுரம் சென்ற பிறகு, அதை கள்ளக் காதலன் சுந்தரத்திடம் தெரியப்படுத்துவதற்காக, வேறு ஒருவரிடம் செல்போனை பெற்று, சுந்தரத்துக்கு அபிராமி பேசியுள்ளார். 

   இதையடுத்து, சுந்தரம் மூலமே அபிராமியை, நாகர்கோவிலுக்கு வரவழைத்து அவரை போலீஸார் பிடித்துள்ளனர். 

பாலில் விஷம் கலந்து கொடுத்து குழந்தைகளை கொன்ற தாய் குறித்த பரபரப்பு தகவல்...


குழந்தைகளுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற தாய் கைது...



பாலில் விஷம் கலந்து கொடுத்து பெற்ற குழந்தைகளை கொன்ற தாய்...


 அபிராமியின் பகீர் வாக்குமூலம் : 


கணவனின் உருக்கமான தகவல்கள் :

இதுவரை குழந்தைகளை ஒருமுறை கூட அடிக்காத தன் மனைவி, அவர்களை கொன்றிருக்கும் அதிர்ச்சியில் இருந்து மீண்டு வர முடியவில்லை என அபிராமியின் கணவர் விஜய் காவல் நிலையத்தில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்