அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மோசடி: மேலும் 30 பேருக்கு தொடர்பு என தகவல்

அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மோசடியில் மேலும் 30 பேருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Update: 2018-09-01 13:11 GMT
அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் திருத்தும் பணியில் மறுகூட்டல் முறையில் முறைகேட்டில் ஈடுபட்ட உதவி பேராசிரியர்கள் விஜயகுமார் மற்றும் சிவகுமாரிடம் இரண்டாவது நாளாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

விசாரணையில், மறுகூட்டல் முறையில் மோசடிக்கு உதவியாக இருந்த அண்ணா பல்கலைக்கழக ஊழியர்கள் பேராசிரியர்கள், முன்னாள் பேராசிரியர்கள் என  30 பேரின் பெயர்களை தெரிவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்