ஐபிஎஸ் அதிகாரி சிவனாண்டி வழக்கு-சிபிஐ க்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ஓய்வு பெற்ற ஐ.ஜியும், ஐபிஎஸ் அதிகாரியுமான சிவனாண்டி தொடர்புடைய வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-08-31 15:51 GMT
பாண்டியராஜ் என்பவரிடம் சைலஜா ரெட்டி உள்ளிட்ட 3 பேர் 50 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை வாபஸ் பெறும் படி ஐபிஎஸ் அதிகாரி சிவனாண்டி நெருக்கடி தந்ததாக பாண்டியராஜன் புகார் 
அளித்திருந்தார். இதுதொடர்பான இந்த மூன்று வழக்குகளை சிபிசிஐடி  விசாரணைக்கு மாற்றி  சென்னை உயர்நீதிமன்றம் 
உத்தரவிட்டது. ஆனால் வழக்கை சிபிஐ க்கு மாற்றக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 
பி.என் பிரகாஷ்,  மனுதாரருக்கு ஐபிஎஸ் அதிகாரி சிவனாண்டி அழுத்தம் கொடுத்ததற்கு ஆதாரங்கள் இருப்பதாக கூறி வழக்கை 
சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்