ஒரே ஆண்டில் 3-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 80 ஆயிரம் கன அடிநீர் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

Update: 2018-08-22 02:07 GMT
கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 80 ஆயிரம் கன அடிநீர் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணை, ஒரே ஆண்டில் 3- வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 80 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் கரையோர மக்கள், பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

19 ஆண்டுகளுக்கு பிறகு ரெட்ராயர் குளத்திற்கு வந்த காவிரி நீர்
தண்ணீரை கையில் பிடித்து மகிழ்ந்த மக்கள் கும்பகோணத்தில் உள்ள பழமையான ரெட்ராயர் குளத்திற்கு 19 ஆண்டுகளுக்கு பின்னர் காவிரி நீர் வந்தது. பல தடைகளை தாண்டி குளத்திற்கு வந்த காவிரி நீரை பொதுமக்கள் கையில் அள்ளிப் பிடித்து மகிழ்ந்தனர். இதனால் அப்பகுதியில் உள்ள தண்ணீர் பிரச்சனை தீரும் எனவும் பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்