ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணிகளுக்கு தடை கோரிய மனு - தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகப் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

Update: 2018-08-17 13:11 GMT
* ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகப் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

* தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

* அப்போது, தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், ஸ்டெர்லைட் தொடர்ந்த வழக்கை முன்னுரிமை அடிப்படையில் விசாரிக்கவும் தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தது.

Tags:    

மேலும் செய்திகள்