55,000 ரூபாயை உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு

விழுப்புரத்தில் சாலையில் கிடந்த 55 ஆயிரம் ரூபாயை உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் நேரில் அழைத்து பாராட்டினார்.

Update: 2018-08-13 05:05 GMT
உளுந்தூர்பேட்​டையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜா கடந்த வெள்ளிக்கிழமை முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தில் இருந்து ஏதோ கீழே விழு​ந்துள்ளதை பார்த்துள்ளார். அருகில் சென்று பார்த்தபோது கட்டுக்கட்டாக பணம் இருப்பதை அறிந்து அந்த இருசக்கர வாகனத்தை விரட்டிப் பிடித்து விசாரித்துள்ளார். இதனைத் தொடர்ந்து குன்னத்தூர் டாஸ்மாக் கண்காணிப்பாளர் தான் பணத்தை தவறவிட்டவர் என்பது தெரியவந்ததை அடுத்து போலீசாரின் முன்னிலையில் பணத்தை ஒப்படைத்துள்ளார். இதனையறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் அழைத்து ராஜாவை பாராட்டினார்.
Tags:    

மேலும் செய்திகள்