டி.என்.பி.எஸ்.சி.குரூப் 2 தேர்வு தேதி அறிவிப்பு

சார்பதிவாளர்,இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் மற்றும் நகராட்சி ஆணையர் உள்ளிட்ட ஆயிரத்து 199 பதவிகளை நிரப்புவதற்கான போட்டித்தேர்வை டிஎன்பிஸ்சி அறிவித்துள்ளது.

Update: 2018-08-10 12:37 GMT
* இது குறித்து தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் விடுத்துள்ள அறிவிப்பில், ஆயிரத்து 199 பணியிடங்களுக்கு இன்று முதல், செப்டம்பர் 9ஆம் தேதி வரை டிஎன்பிஸ்சி இணையதளம் வழியே, விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

* தேர்வுக்கட்டணத்தை, செப்டம்பர் 11ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும், முதல்நிலை போட்டித்தேர்வு, நவம்பர் 11ஆம் தேதி காலை 10 மணி் முதல் 1 மணி வரை நடைபெறும் என டிஎன்பிஸ்சி அறிவித்துள்ளது. 

* குரூப் 2 நிலையில், குறைந்த எண்ணிக்கையிலான இடங்களே  அறிவிக்கப்படுவது வழக்கம். ஆனால், முதல் முறையாக ஆயிரத்து 199 இடங்கள் அறிவித்திருப்பது, பட்டதாரிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்