திமுக தலைவர் கருணாநிதிக்கு மவுன அஞ்சலி

மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு பல இடங்களில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Update: 2018-08-09 09:40 GMT
திருவாரூர்:                                                  
திமுக தலைவர் கருணாநிதியின் சொந்த மாவட்டமான திருவாரூரின் பல இடங்களில் அவரின் உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அவர் படித்த, வடபாதிமங்கலம் சோமசுந்தரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தினர்.

சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி உள்ளிட்ட இடங்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அமைதி ஊர்வலம் சென்று மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினர். தி.மு.க.,காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட பல்வேறு கட்சியினர் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். 

காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சார்பில் கருணாநிதி மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அவரது உருவ படத்திற்கு மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்திய வியாபாரிகள், அவரின் சாதனைகள் குறித்து விளக்கி பேசினர்.

இலங்கை யாழ்ப்பாணம்:
இலங்கை வட மாகாண சபையிலும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு  மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது பேசிய  வடமாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன், கருணாநிதியின் வாழ்க்கை தனக்கு முன்மாதிரியாக இருப்பதாக தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்