அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கலந்தாய்வு காலக்கெடுவை நீட்டிக்கக் கோரிய மனு மீது உச்ச நீதிமன்றம் புது உத்தரவை பிறப்பித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கலந்தாய்வு காலக்கெடுவை நீட்டிக்கக் கோரிய மனு மீது உச்ச நீதிமன்றம் புது உத்தரவை பிறப்பித்துள்ளது.

Update: 2018-07-16 12:32 GMT
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கலந்தாய்வின் காலக்கெடுவை ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனுவை தமிழக அரசு தாக்கல் செய்திருந்தது.

அதில், மருத்துவ கலந்தாய்வு தற்போது தடைபட்டு இருப்பதாகவும், இதற்காக பொறியியல் கலந்தாய்வை நீட்டிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு, எந்த காரணத்திற்காக, நீட் மருத்துவ கலந்தாய்வு தடைப்பட்டது என்ற விவரத்தை மனுவில் குறிப்பிடவில்லை என தெரிவித்துள்ளது. மேலும், மனுவை திரும்பப் பெற்று விட்டு, நீட் தொடர்பான மதுரை உயர் நீதிமன்ற கிளையின் உத்தரவையும் இணைத்து புதிய மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, வழக்கை வரும் புதன்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்