5 நாள் வருமான வரி சோதனை நிறைவு

திருச்செங்கோடு தனியார் சத்து மாவு நிறுவன உரிமையாளர் குமாரசாமி, கூட்டுறவு வங்கியில், 250 கோடி ரூபாய் டெபாசிட் செய்திருந்தது , வருமான வரித்துறை சோதனையில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

Update: 2018-07-09 15:08 GMT
வரி ஏய்ப்பு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் மீது, தமிழகம் மற்றும் கர்நாடகாவில், ஒரே நேரத்தில் 76 இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள், கடந்த 5 ம் தேதி அதிரடி சோதனையை துவக்கினர். இந்த சோதனையில், சுமார் 100 போலி நிறுவனங்கள் துவக்கி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. 5 நாள் நீடித்த, சோதனை , மாலையுடன் நிறைவடைந்ததாக வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்