போராட்டத்தில் பங்கேற்றாரா தோனி ? சமூக வலைத்தளத்தில் தவறாக பரவி வரும் புகைப்படம்..!
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்திருந்த போராட்டத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி பங்கேற்றார் என்று சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்று உலா வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோல் நிலையம் முன் தோனி அமர்ந்திருப்பது போல் உள்ள இந்தப் படத்தை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தோனியின் இந்தப் படம் , அவர் குடும்பத்துடன் சுற்றுலா சென்ற போது எடுத்தது என்று தெரியவந்துள்ளது. இந்தப் படத்தை வைத்தே தோனி போராட்டத்தில் பங்கேற்றுள்ளார் என்று சிலர் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.