ஆசிய கோப்பை கிரிக்கெட் : இந்திய அணி அறிவிப்பு

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

Update: 2018-09-01 17:13 GMT
14 - வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 15 -ம் தேதி துவங்குகிறது. 28 ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில், நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் உள்பட 6 அணிகள் கலந்து கொள்கின்றன.

ஆசிய போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி, மும்பையில் தேர்வு செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டது. இதன்படி, ரோகித் சர்மா (கேப்டனாக),ஷிகர் தவான், கே.எல். ராகுல், அம்பத்தி ராயுடு, மணிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், எம்.எஸ். தோனி, தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், ஹர்திக்  பாண்ட்யா, ஒய். சஹால், அக் ஷய் படேல்,
புவனேஷ் குகார், ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாகூர், கலீல் அகமது ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

முதுகுவலி காரணமாக அவதிப்பட்டு வரும் இந்திய அணியின் கேப்டன் வீராட் கோலிக்கு ஒய்வு அளிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் சுரேஷ் ரெய்னா, அணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அம்பத்தி ராயுடுவுக்கு, இந்திய அணியில் இடம் அளிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்