மென்பொருள் நிறுவன தூதராக தோனி நியமனம்
Wardwiz என்ற அந்த மென்பொருள் நிறுவனம் 3 ஆண்டுக்கு தோனியை தூதராக 15 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது
ஜெர்மனியை சேர்ந்த தனியார் மென்பொருள் நிறுவனத்தின் தூதராக இந்திய கிரிக்கெட் வீரர் தோனி நியமிக்கப்பட்டுள்ளார். Wardwiz என்ற அந்த மென்பொருள் நிறுவனம் 3 ஆண்டுக்கு தோனியை தூதராக 15 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது. தோனியை தூதராக நியமித்ததன் மூலம் இந்தியாவில் திறம்பட செயல்பட முடியும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கேப்டன் பதவியை துறந்தும் விளம்பரம் மூலம் அதிகளவு தோனி சம்பாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.