பிரதமர் மோடியை சந்தித்தார், ராஜபக்சே - மரியாதை நிமித்தமான சந்திப்பு என விளக்கம்
சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே புதுடெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார்.
இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பு, மரியாதை நிமித்தமானது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதனிடையே, இந்திய தலைவர்கள் பலரையும் சந்திக்க ராஜபக்சே முடிவு செய்துள்ளார்.