எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடத்துவது குறித்து அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர்

பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2018-09-12 13:50 GMT
சென்னை தலைமை செயலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் வரும் 30ஆம் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது அமைச்சர்கள் மீதான புகார்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்