வைகோ உள்பட 83 பேர் விடுதலை - தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு

கருப்பு கொடி காட்டிய வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்பட 83 பேரை தூத்துக்குடி நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

Update: 2018-09-11 16:32 GMT
கடந்த 2009ஆம் ஆண்டில் அப்போதைய மத்திய அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, தூத்துக்குடிக்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்தபோது அவருக்கு எதிராக கருப்பு கொடி காட்டியதாக வைகோ உள்பட 159 பேர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்த போது, வைகோ உள்பட 83 பேரை விடுதலை செய்து நீதிபதி பிஸ்மிதா தீர்ப்பளித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்