"கலால் வரியை திரும்ப பெற வேண்டும்" - மத்திய அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கோரிக்கை
பெட்ரோல் - டீசல் விலை உயர்வை குறைக்க, கலால் வரியை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
பெட்ரோல் - டீசல் விலை உயர்வை குறைக்க, கலால் வரியை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக தமது டுவிட்டர் வலைப்பதிவில் மக்களின் கோபத்தை இன்றைய முழு அடைப்பு போராட்டம் உணர்த்தி இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார். பெட்ரோல் - டீசல் விலை மீதான கடுமையான விலை உயர்வால் தமிழக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ள மு.க. ஸ்டாலின், மாநில அரசும், உரிய நடவடிக்கை எடுக்குமாறு, கேட்டுக்கொண்டுள்ளார்.
Total insensitivity of BJP-Modi Govt to suffering of citizens due to #PetrolDieselPriceHike which has impacted other prices too.
— M.K.Stalin (@mkstalin) September 10, 2018
The anger of people is evident in #BharatBandh.
I urge the Govt to rollback Central excise duty & provide urgent relief from the backbreaking burden. pic.twitter.com/klmLc00mQi