"7 பேரை விடுவிப்பதில் ஆட்சேபனை இல்லை" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட 7 பேரை விடுவிப்பதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட 7 பேரை விடுவிப்பதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ராகுல்காந்தியும், பிரியங்காவும் 7 பேரையும் விடுவிக்குமாறு கூறி இருப்பதால் தனக்கும் இதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை என நாராயணசாமி தெரிவித்துள்ளார்.