பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய கூடாது - காங்கிரஸ் எம்.எல்.ஏ.வசந்தகுமார்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய கூடாது என காங்கிரஸ் எம்எல்ஏ வசந்தகுமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-07 15:28 GMT
சென்னை வடபழனியில் குழந்தைகளை பாலியல் வன்கொடுமையிலிருந்து காப்போம் எனும் தலைப்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. வசந்தகுமார் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று, கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்தனர். நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. வசந்தகுமார், இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய அரசியல் தலைவராக இருந்த ராஜீவ் காந்தியை, கொலை செய்தவர்களை நிச்சயம் விடுதலை செய்யக்கூடாது என்றார். 
Tags:    

மேலும் செய்திகள்