தமிழிசை அல்ல யாராக இருந்தாலும் குரல் கொடுப்போம் - ஜெயக்குமார்

மாணவி சோபியா விவகாரத்தில், தமிழிசை மட்டுமில்லை எந்த தலைவராக இருந்தாலும் குரல் கொடுப்போம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-05 06:39 GMT
அழகிரி தலைமையில் பேரணி நடைபெறுவதால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக் கூடாது என்பதற்காகவே, சென்னையில் முதலமைச்சர் பங்கேற்கும்  நிகழ்ச்சியின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். இதுபோல, பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு எனவும் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மாணவி சோபியா விவகாரத்தில், தமிழிசை மட்டுமில்லை எந்த தலைவராக இருந்தாலும் குரல் கொடுப்போம் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 


Tags:    

மேலும் செய்திகள்