சோபியா மீதான வழக்குகளை திரும்ப பெறுங்கள் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

தூத்துக்குடி ஆராய்ச்சி மாணவி சோபியா மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 2 -வது டுவிட்டர் பதிவில் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2018-09-05 01:29 GMT
சோபியா கைது சம்பவத்தை கண்டித்து அவர் வெளியிட்ட, 2 -வது டுவிட்டர் பதிவில் ஆராய்ச்சி படிப்பை தொடர அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 

கருத்து சுதந்திரத்தை நசுக்கும் விதத்தில் அதிமுக அரசு தமிழகத்தில் இருப்பதாக குற்றஞ்சாட்டி உள்ள மு.க. ஸ்டாலின் எவ்வித அராஜகங்களிலும் ஈடுபடலாம் என்ற தைரியத்தில் பாஜக செயல்படுவதாக தமது டுவிட்டர் பதிவில் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்