சோபியா கைது - தினகரன் கண்டனம்
சோபியா கைது செய்யப்பட்டதற்கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், விமானத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தமிழிசையின் செயல், ஒரு கட்சியின் மாநிலத்தலைவர் என்ற முறையில் பெருந்தன்மையாகவும், முதிர்ச்சியாகவும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
தமிழிசை மீது சோஃபியாவின் தந்தை அளித்த புகார் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது எனவும் தினகரன் குறிப்பிட்டுள்ளார்.