வருமான வரி சோதனை: அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை மறுப்பு

2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், 7 ஆம் தேதியன்று தமது வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனையின் போது பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

Update: 2018-09-01 12:21 GMT
வருமான வரி சோதனை குறித்து வெளி வரும் சில செய்திகள், அரசியல் எதிரிகளால் திட்டமிட்டு திரித்து பரப்பப்படுவதாக புகார் தெரிவித்துள்ளார். இந்த சோதனையை தொடர்ந்து, வருமானவரித்துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். 

விசாரணையின் போது எழுப்பப்படும் கேள்விகளுக்கு உரிய விவரங்களை அளித்துள்ளதாகவும், ஊடகங்களில் வெளிவருவது போல் எந்த வாக்குமூலமும் அளிக்கப்படவில்லை என்றும் சின்னத்தம்பி குறிப்பிட்டுள்ளார். 

தன் மீதும், தமது குடும்பத்தினர் மீதும் உண்மைக்கு புறம்பாக தவறான தகவல்களை பரப்பி வருவது மன உளைச்சலை தருவதாக தெரிவித்துள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை, அரசியல் எதிரிகளால் திட்டமிட்டு உருவாக்கப்படும், சூழ்ச்சிகளை அரசியல் ரீதியாக எதிர்கொள்வோம் என்றும் அறிக்கையில் உறுதிபட தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்